இணைய பண பரிவர்த்தனை செய்பவர்களின் கணக்குகளில் இருந்து பணம் கொள்ளை
26 April 2024 | k.yoshiya
இணைய பண பரிவர்த்தனை செய்பவர்களின் கணக்குகளில் இருந்து பணம் கொள்ளை
26 April 2024 | k.yoshiya
நடைமுறைக் கணக்குகள் மற்றும் சேமிப்புக் கணக்குகள் மூலம் இணையத்தில் பரிவர்த்தனை செய்பவர்களின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் மோசடியானது சுமார் ஒரு வார காலமாக இயங்கி வருவதாக பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட கவுன்சிலர் காமினி வலேபொட இன்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த மோசடி மூலம் கணக்கு வைத்திருப்பவர்களுக்குத் தெரியாமல் வேறு கணக்குகளுக்கு பணம் மாற்றப்படுவதாகத் தெரிவித்த அவர், பணத்தைப் பெறுவதற்கான சிறிய தொகையைக் கூட பெறாத வகையில் இந்த மோசடி செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார்.
கணக்கில் இருந்து பதினோரு இலட்சம் வேறு கணக்கிற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் நேற்று 25ஆம் திகதி கிடைத்த முறைப்பாட்டின்படி அவர் வங்கிக்குச் சென்று சோதனையிட்டபோது, இணையவழியில் குழுவொன்று இம்மோசடியில் தெரியவந்துள்ளது.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் இம்மோசடியை மேற்கொண்டு வருவதாக காமினி வலேபொட தெரிவித்தார்.
ஒரே நாளில் சுமார் 50 முதல் 60 கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்து பெரும் மோசடி நடைபெறுவதாகவும் இரண்டு மூன்று நாட்களில் சுமார் ஆயிரம் பேரின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இந்த மோசடி தொடர்பில் மத்திய வங்கிக்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கும் அறிவிக்குமாறு பாராளுமன்றத்தில் அவர் கோரிக்கையை விடுத்தார்.