கோட்டை ரயில் நிலையத்தில் விபத்து – இரு பெண்கள் படுகாயம்
26 April 2024
கோட்டை ரயில் நிலையத்தில் விபத்து – இரு பெண்கள் படுகாயம்
26 April 2024
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி சென்ற ரயில் கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடைக்கு மாலை 04.35 மணியளவில் வந்தடைந்த போது ரயில் நிற்கும் முன்னர் ரயிலில் ஏற முற்பட்ட இரண்டு பெண்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதனால், இருவரும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதில் இரண்டு ரயில் பெட்டிகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட ஒரு பெண் வெளியே வருவதற்கு சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.