கால்வாயில் விழுந்து குழந்தையொன்று உயிரிழப்பு
27 April 2024 | k.yoshiya
கால்வாயில் விழுந்து குழந்தையொன்று உயிரிழப்பு
27 April 2024 | k.yoshiya
வெலிகந்த பிரதேசத்தில் கால்வாயொன்றில் தவறி விழுந்த குழந்தையொன்று சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் நீரில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (26) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் வெலிகந்த ஜயவிக்ரமகம மஹாவலி சிங்கபுர இசுருவைச் சேர்ந்த ஜயநாத் பண்டார என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தை வீட்டின் பின்புறமுள்ள வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அருகிலிருந்த கால்வாயில் தவறி வீழ்ந்து நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இதனைக் கண்ட வெலிகந்த பிரதேசத்தில் உள்ள தனியார் நெல் ஆலையொன்றின் ஊழியர் ஒருவராலும் அங்குள்ள சிலராலும், குழந்தை மீட்கப்பட்டு வெலிகந்த வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர், வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், குழந்தையின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.