3 மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது
21 December 2023
3 மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது
21 December 2023
நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி கிதுல்லே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய திருமணமான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது மனைவியும் ஆசிரியையாகப் பணியாற்றி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியரான இவர், மூன்று மாணவிகளில் ஒருவருடன் காதல் உறவைப் பேணி, அந்த மாணவி மூலம் மற்ற இரு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த மாணவிகளிடமிருந்து கிடைத்த தகவலின்படி, இந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த ஆசிரியர் மாணவி ஒருவரை வாட்ஸ்அப் மூலம் நிர்வாண புகைப்படங்களைக் கேட்டு வற்புறுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.